நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வட.மாகாணத்திலுள்ள சுகாதார ஊழியர்கள் அனைவரின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விடுமுறை...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வட.மாகாணத்திலுள்ள சுகாதார ஊழியர்கள் அனைவரின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விடுமுறையில் இருப்பவர்களை மீண்டும் கடமைக்கு திரும்புமாறும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெய்வேந்திரம் மேலும் கூறியுள்ளதாவது, “குறிப்பாக வடக்கு மாகாணத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
தற்போது சீரற்ற மழை காரணமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை வட.மாகாணத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதிகளில், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நேற்று, சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வட.மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதுடன் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் இதன்போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சென்றிருக்கின்றார்.
குறிப்பாக மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறைவாக இருப்பதனால், ஏனைய மாவட்டங்களில் இருந்து வளவாளர்கள் மற்றும் பரிசோதனை ஆய்வாளர்களை இங்கு அழைத்து வந்து, அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாங்கள் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
வட.மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை கூறிய அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இன்று முதல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை பெற்றவர்களின் விடுமுறை இரத்து செய்யப்படுகின்றது. அவர்களை உடனடியாக கடமைக்கு வருமாறு நாங்கள் அழைக்கின்றோம்” என்றார்.
சுகாதார அமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெய்வேந்திரம் மேலும் கூறியுள்ளதாவது, “குறிப்பாக வடக்கு மாகாணத்திலுள்ள மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
தற்போது சீரற்ற மழை காரணமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை வட.மாகாணத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதிகளில், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நேற்று, சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வட.மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதுடன் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் இதன்போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சென்றிருக்கின்றார்.
குறிப்பாக மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறைவாக இருப்பதனால், ஏனைய மாவட்டங்களில் இருந்து வளவாளர்கள் மற்றும் பரிசோதனை ஆய்வாளர்களை இங்கு அழைத்து வந்து, அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாங்கள் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
வட.மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை கூறிய அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இன்று முதல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை பெற்றவர்களின் விடுமுறை இரத்து செய்யப்படுகின்றது. அவர்களை உடனடியாக கடமைக்கு வருமாறு நாங்கள் அழைக்கின்றோம்” என்றார்.