யேமன் நகரமான மரிபில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் நேற்று (சனிக்கிழமை) தாக்குதல் ஒன்றினை நடத்தியுள்ளது. இந்த த...
யேமன் நகரமான மரிபில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் நேற்று (சனிக்கிழமை) தாக்குதல் ஒன்றினை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் எக்பரியா தொலைக்காட்சி ஆதாராத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் யேமனில் ஒரு பினாமி போர் நடந்து வருகிற நிலையில் ஹவுத்திகள் ஈரானின் கைக்கூலிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் சனா மற்றும் யேமனின் பெரும்பாலான நகர மையங்களை வைத்திருக்கும் ஹவுத்திகள் ஈரானின் சார்பாக இயங்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.
இதனால் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு ஹவுத்திஸ் போராளிகள் உடனடியாக பொறுப்பேற்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் எக்பரியா தொலைக்காட்சி ஆதாராத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் யேமனில் ஒரு பினாமி போர் நடந்து வருகிற நிலையில் ஹவுத்திகள் ஈரானின் கைக்கூலிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் சனா மற்றும் யேமனின் பெரும்பாலான நகர மையங்களை வைத்திருக்கும் ஹவுத்திகள் ஈரானின் சார்பாக இயங்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.
இதனால் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு ஹவுத்திஸ் போராளிகள் உடனடியாக பொறுப்பேற்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.