யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு வீடொன்றில் திடீா் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் அப்ப...
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு வீடொன்றில் திடீா் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினா் மீது தாக்குதல் நடத்தியதாக தேடப்படும் முக்கிய இளைஞன் உள்ளிட்ட 6 போ் தங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டினை இன்று (வியாழக்கிழமை) பெருமளவிலான இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது இளைஞன் ஒருவரையும் இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினா் மீது தாக்குதல் நடத்தியதாக தேடப்படும் முக்கிய இளைஞன் உள்ளிட்ட 6 போ் தங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டினை இன்று (வியாழக்கிழமை) பெருமளவிலான இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது இளைஞன் ஒருவரையும் இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.