நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப...
நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியானது நியூஸிலாந்துடன் 5 இருபதுக்கு-20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை ஒக்லாந்தில் ஆரம்பமான இருபதுக்கு-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒக்லாந்தில் ஆரம்பான இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 133 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் கே.எல். ராகுல் 57 ஓட்டங்களையும், ஸரேயர்ஸ் ஐயர் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக கே.எல். ராகுல் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியானது நியூஸிலாந்துடன் 5 இருபதுக்கு-20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை ஒக்லாந்தில் ஆரம்பமான இருபதுக்கு-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒக்லாந்தில் ஆரம்பான இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 133 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் கே.எல். ராகுல் 57 ஓட்டங்களையும், ஸரேயர்ஸ் ஐயர் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக கே.எல். ராகுல் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.