காணாமல் போனவர்கள் எவரும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருப்பது அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையே வெளிக்காட்டுவதா...
காணாமல் போனவர்கள் எவரும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருப்பது அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையே வெளிக்காட்டுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு மாற்று அணியொன்று கட்டாயம் தேவையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காணாமல் போனவர்கள் அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள் என்று சொல்வது எந்தவகையில் நியாயமாகும்? இவ்வாறு காணாமல் போனவர்கள் புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதும் எவ்வாறு நியாயமாகும்?
விடுதலைப் புலிகள் மெளனிக்கப்பட்ட பின்னர், யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள், பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?
அந்த நேரத்தில் அத்தனை இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தவர் இப்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவர்தான் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர்.
அவர், காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்வதை, தாங்கள் அவர்களைக் கொன்றுவிட்டோம் என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.
எனவே, இந்த விடயத்துக்கு ஐ.நா.வின் தீர்மானத்திற்கு அமைய விசாரணையும் பொறுப்புக்கூறலும் அவசியமாக உள்ளது. அது மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
இதேவேளை, தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியலில் மாற்று அணி ஒன்று தேவை என்பது ஒரு சதியென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருப்பது முற்றிலும் தவறானதாகும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவர்களுக்கு முண்டுகொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது சுயநல அரசியலில் ஈடுபட்ட கூட்டமைப்பு, இதுபற்றிச் சொல்வது மீண்டும் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு மாற்று அணியொன்று கட்டாயம் தேவையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காணாமல் போனவர்கள் அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள் என்று சொல்வது எந்தவகையில் நியாயமாகும்? இவ்வாறு காணாமல் போனவர்கள் புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதும் எவ்வாறு நியாயமாகும்?
விடுதலைப் புலிகள் மெளனிக்கப்பட்ட பின்னர், யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள், பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?
அந்த நேரத்தில் அத்தனை இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தவர் இப்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவர்தான் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர்.
அவர், காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்வதை, தாங்கள் அவர்களைக் கொன்றுவிட்டோம் என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.
எனவே, இந்த விடயத்துக்கு ஐ.நா.வின் தீர்மானத்திற்கு அமைய விசாரணையும் பொறுப்புக்கூறலும் அவசியமாக உள்ளது. அது மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
இதேவேளை, தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியலில் மாற்று அணி ஒன்று தேவை என்பது ஒரு சதியென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருப்பது முற்றிலும் தவறானதாகும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவர்களுக்கு முண்டுகொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது சுயநல அரசியலில் ஈடுபட்ட கூட்டமைப்பு, இதுபற்றிச் சொல்வது மீண்டும் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.