இரணைமடுக் குளத்திற்கு நிகராக 40 எம். சி நீர் கொள் அளவு கொண்ட ஓர் பாரிய குளம் கரிப்பட்ட முறிப்பு பகுதியில் அமைப்பமற்குரிய புதிய திட்டம் ஒன்று...
இரணைமடுக் குளத்திற்கு நிகராக 40 எம். சி நீர் கொள் அளவு கொண்ட ஓர் பாரிய குளம் கரிப்பட்ட முறிப்பு பகுதியில் அமைப்பமற்குரிய புதிய திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கும் நிலையில் குளம் அமைக்கப்படும் மாவட்டம் தொடர்பிலும் கரிசணைகொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பானத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தில் இரணைமடுக் குளத்தில் தேக்கப்படும் நீர் கிளிநொச்சி மாவட்டத்தில் கானப்படும் வயல் நிலத்தின் அளவிற்கே போதாமை காரணமாக அந்த மாவட்டமே குறைந்த அளவிலேயே சிறுபோகம் செய்வதோடு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் கோடை காலத்துல் குடிநீர்த் தட்டுப்பாட்டினை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் இவை அனைத்தையும் நிறைவு செய்யும் அதேநேரம் குடாநாட்டிற்கான நீரையும் இக் குளத்தில் இருந்தே கொண்டு சென்றே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்போர் தற்போது மற்றுமோர் திட்டத்தினை முன்வைத்துள்ளனர். அதாவது இரனைமடுக் குளத்திற்கு மாற்றீடான குளம் ஒன்றை அமைத்து மாரிகாலத்தில் வரும் மேலதிக நீரை சேகரித்து அதனை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதே இதன் திட்டம். இந்த வகையிலே குறித்த திட்டத்திற்கான முன்மொழிவு , திட்ட அறிக்கை , சாத்தியவள அறிக்கை என்பன தயார் செய்யப்பட்டு ஓர் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக 22 அல்லது 24 எம்.சீ.எல் நீர் தேவை என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரி வருகின்றது. இதற்கமைய மாங்குளம் சந்தியில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பாதையில் 7வது கிலோ மீற்றரில் உள்ளது கரிப்பட்டமுறிப்பு கிராமம் அந்த கிராமத்தில் இருந்து தெற்கு நோக்கிப் 6 கிலோ மீற்றர் பயணித்து அங்கே சுமார் மூவாயிரம் வனப் பிரதேசத்தில் ஓர் நீர்த்தேங்கம் அதாவது ஓர் குளம் அமத்து பருவ காலத்தில் இரணைமடுக் குளம் நிறைந்ததும் புதிதாக அமைக்கப்படும் குளத்திற்ற்கான பாதை கனகராயன் ஆற்றில் திறக்கப்பட்டு புதிய குளத்தில் நீர் தேக்கப்படும் அவ்வாறு தேக்கிய நீரின் அளவேஇரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் என்பதே திட்டம்.
அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் சமயம் குறித்த குளத்து நீர் இரணைமடு நோக்கி திறந்துவிடப்படும் என கூறப்படுகின்றது. அவ்வாறு இடம்பெறும் திட்டம் ஒருபுறம் இருக்க இதற்காக கரிப்பட்டமுறிப்பிற்கும் விஞ்ஞானகுளத்திற்கும் இடைப்பட்ட 3 ஆயிரம் ஏக்கருக்கும் குறையாத காடு அழிக்கப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறான ஒரு பெருந்தொகை காட்டினை அழிக்க வனவளத் திணைக்களம் , சுற்றுச் சூழல் அதிகார சபை ஆகியவற்றின் அனுமதி கிடைக்குமா என்பதும் பெரியதோர் கேள்விக்குரியாகவே உள்ளது.
அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் இதனாலும் இங்கே அமைக்கப்படும் குளத்தினாலும் எமக்கு அதாவது அமைக கப படும் குளத்மின் அருகில் வாழும் எமக்கு எந்தவிதத்திலும் நன்மையோ அல்லது ஒரு ஏக்கர் நிலத்திற்கான நீரோ பயன்படுத்தும் சாத்தியம் இல்லாத நிலையில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதேநேரம் இக் குளத்தின் அமைவிடத்தின் நிலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர நிலப்பரப்புக்களாகவும் கானப்படுகின்றன.
3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவை என திட்டமிட்டுள்ள இத் திட்டத்தில் இரணைமடுவிற்குப் பதிலாக பாலியாறு , வடமராட்சி , வண்ணாத்திப்பாலம் என மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட்ட நிலையில் இரணைமடு மீண்டும் தூசு தட்டப்படுகின்றது . இவ்வாறு வடக்கு மாகாண நீர்ப்பாசணத் திணைக்களம் மற்றும் வவிசாயத் திணைக்களம் இணைத்து தயாரித்த திட்ட முன்மொழிவு ஒன்று தயாரித்து தற்போது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படலாம் எனவும் எதிர்வு கூறப்படும் நிலையில் இத் திட்டத்தினை நடைமுறைப்படெத்த முயற்சிப்பவர்கள் குளம் அமையவுள்ள பிரதேசத்தில் இருந்து தறித்து அகற்றும் மரங்களையும் இந்த மாவட்டத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டும் கதவு , யன்னல் இன்றி வாழும் குடும்பங்களிற்கே பெற்றுத்தர வேண்டும். எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர். -
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பானத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தில் இரணைமடுக் குளத்தில் தேக்கப்படும் நீர் கிளிநொச்சி மாவட்டத்தில் கானப்படும் வயல் நிலத்தின் அளவிற்கே போதாமை காரணமாக அந்த மாவட்டமே குறைந்த அளவிலேயே சிறுபோகம் செய்வதோடு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் கோடை காலத்துல் குடிநீர்த் தட்டுப்பாட்டினை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் இவை அனைத்தையும் நிறைவு செய்யும் அதேநேரம் குடாநாட்டிற்கான நீரையும் இக் குளத்தில் இருந்தே கொண்டு சென்றே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்போர் தற்போது மற்றுமோர் திட்டத்தினை முன்வைத்துள்ளனர். அதாவது இரனைமடுக் குளத்திற்கு மாற்றீடான குளம் ஒன்றை அமைத்து மாரிகாலத்தில் வரும் மேலதிக நீரை சேகரித்து அதனை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதே இதன் திட்டம். இந்த வகையிலே குறித்த திட்டத்திற்கான முன்மொழிவு , திட்ட அறிக்கை , சாத்தியவள அறிக்கை என்பன தயார் செய்யப்பட்டு ஓர் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக 22 அல்லது 24 எம்.சீ.எல் நீர் தேவை என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரி வருகின்றது. இதற்கமைய மாங்குளம் சந்தியில் இருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பாதையில் 7வது கிலோ மீற்றரில் உள்ளது கரிப்பட்டமுறிப்பு கிராமம் அந்த கிராமத்தில் இருந்து தெற்கு நோக்கிப் 6 கிலோ மீற்றர் பயணித்து அங்கே சுமார் மூவாயிரம் வனப் பிரதேசத்தில் ஓர் நீர்த்தேங்கம் அதாவது ஓர் குளம் அமத்து பருவ காலத்தில் இரணைமடுக் குளம் நிறைந்ததும் புதிதாக அமைக்கப்படும் குளத்திற்ற்கான பாதை கனகராயன் ஆற்றில் திறக்கப்பட்டு புதிய குளத்தில் நீர் தேக்கப்படும் அவ்வாறு தேக்கிய நீரின் அளவேஇரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் என்பதே திட்டம்.
அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் சமயம் குறித்த குளத்து நீர் இரணைமடு நோக்கி திறந்துவிடப்படும் என கூறப்படுகின்றது. அவ்வாறு இடம்பெறும் திட்டம் ஒருபுறம் இருக்க இதற்காக கரிப்பட்டமுறிப்பிற்கும் விஞ்ஞானகுளத்திற்கும் இடைப்பட்ட 3 ஆயிரம் ஏக்கருக்கும் குறையாத காடு அழிக்கப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறான ஒரு பெருந்தொகை காட்டினை அழிக்க வனவளத் திணைக்களம் , சுற்றுச் சூழல் அதிகார சபை ஆகியவற்றின் அனுமதி கிடைக்குமா என்பதும் பெரியதோர் கேள்விக்குரியாகவே உள்ளது.
அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் இதனாலும் இங்கே அமைக்கப்படும் குளத்தினாலும் எமக்கு அதாவது அமைக கப படும் குளத்மின் அருகில் வாழும் எமக்கு எந்தவிதத்திலும் நன்மையோ அல்லது ஒரு ஏக்கர் நிலத்திற்கான நீரோ பயன்படுத்தும் சாத்தியம் இல்லாத நிலையில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதேநேரம் இக் குளத்தின் அமைவிடத்தின் நிலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர நிலப்பரப்புக்களாகவும் கானப்படுகின்றன.
3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவை என திட்டமிட்டுள்ள இத் திட்டத்தில் இரணைமடுவிற்குப் பதிலாக பாலியாறு , வடமராட்சி , வண்ணாத்திப்பாலம் என மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட்ட நிலையில் இரணைமடு மீண்டும் தூசு தட்டப்படுகின்றது . இவ்வாறு வடக்கு மாகாண நீர்ப்பாசணத் திணைக்களம் மற்றும் வவிசாயத் திணைக்களம் இணைத்து தயாரித்த திட்ட முன்மொழிவு ஒன்று தயாரித்து தற்போது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படலாம் எனவும் எதிர்வு கூறப்படும் நிலையில் இத் திட்டத்தினை நடைமுறைப்படெத்த முயற்சிப்பவர்கள் குளம் அமையவுள்ள பிரதேசத்தில் இருந்து தறித்து அகற்றும் மரங்களையும் இந்த மாவட்டத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டும் கதவு , யன்னல் இன்றி வாழும் குடும்பங்களிற்கே பெற்றுத்தர வேண்டும். எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர். -