இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி, 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மைதானத்தில் பகலிரவு போட்டியாகவும், மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் மாதம் முதலாம் திகதி கண்டி- பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாகவும், நடைபெறவுள்ளது.
அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி மார்ச் மாதம் 4ஆம் திகதியும், இரண்டாவது ரி-20 போட்டி 6ஆம் திகதியும் பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இதற்கு முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
இதேபோல மேற்கிந்திய தீவுகள் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் செய்தது.
அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி, 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மைதானத்தில் பகலிரவு போட்டியாகவும், மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் மாதம் முதலாம் திகதி கண்டி- பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாகவும், நடைபெறவுள்ளது.
அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி மார்ச் மாதம் 4ஆம் திகதியும், இரண்டாவது ரி-20 போட்டி 6ஆம் திகதியும் பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இதற்கு முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
இதேபோல மேற்கிந்திய தீவுகள் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் செய்தது.