ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 பேரை அடையாளம் கண்டுள்ளாக நாட்டின் சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது. அவர்களில் இருவர் இலங்கையர்கள்.
மூன்று இத்தாலியர்கள், இரண்டு பிரிட்டிஷ் மற்றும் இரண்டு இந்தியர்கள், ஈரான், ஜெர்மனி, தான்சானியா மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளிட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கையர்களுடன் சேர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கல்ப் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இரண்டு இலங்கையர்களும் அபுதாபியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதால் எமிரேட்ஸில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட எமிரேட்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 பேரை அடையாளம் கண்டுள்ளாக நாட்டின் சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது. அவர்களில் இருவர் இலங்கையர்கள்.
மூன்று இத்தாலியர்கள், இரண்டு பிரிட்டிஷ் மற்றும் இரண்டு இந்தியர்கள், ஈரான், ஜெர்மனி, தான்சானியா மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளிட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கையர்களுடன் சேர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கல்ப் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இரண்டு இலங்கையர்களும் அபுதாபியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதால் எமிரேட்ஸில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட எமிரேட்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.