இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அரசு இயந...
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 35 ஆயிரம் பேருக்கு நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்கள் உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஏழு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தொழில்களுக்கு கட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதையடுத்து ஐடி நிறுவன ஊழியர்கள் 60 சதவீதம் பேர் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அவசியமில்லாமல் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. இருமல், சளி, மூச்சுத் திணறல் உள்ளவர்கள், அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றவர்களிடமிருந்து 14 நாட்களுக்கு விலகியிருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நோய் அறிகுறி உடையவர்களை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க இயலும்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தியாவில் பல்வேறு மட்டத்தில் கொரோனாவை முறியடிப்பதற்கான யுத்தம் நடைபெற்று வருகிறது என்ற போதும் அவசர நிலை ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்ற பலர் குணமாகி வீடு திரும்பி வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றுநோய்க்கு உயிரிழந்தார். அவரது மகன் அண்மையில் ஜப்பான், ஜெனிவா மற்றும் இத்தாலிக்கு சென்றிருந்தார். அவருக்கு நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது தாயாரும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா தொற்றுநோய்க்கு உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 85 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 35 ஆயிரம் பேருக்கு நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்கள் உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஏழு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தொழில்களுக்கு கட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதையடுத்து ஐடி நிறுவன ஊழியர்கள் 60 சதவீதம் பேர் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அவசியமில்லாமல் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. இருமல், சளி, மூச்சுத் திணறல் உள்ளவர்கள், அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றவர்களிடமிருந்து 14 நாட்களுக்கு விலகியிருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பல்வேறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நோய் அறிகுறி உடையவர்களை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க இயலும்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தியாவில் பல்வேறு மட்டத்தில் கொரோனாவை முறியடிப்பதற்கான யுத்தம் நடைபெற்று வருகிறது என்ற போதும் அவசர நிலை ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்ற பலர் குணமாகி வீடு திரும்பி வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றுநோய்க்கு உயிரிழந்தார். அவரது மகன் அண்மையில் ஜப்பான், ஜெனிவா மற்றும் இத்தாலிக்கு சென்றிருந்தார். அவருக்கு நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது தாயாரும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா தொற்றுநோய்க்கு உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது.