ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஏமாற்றி விட்டார் என ...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஏமாற்றி விட்டார் என இலங்கை தமிழரசுக் கடசியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அதுவரை காலமும் நாம் ஐக்கிய தேசிய கட்சியை நம்பியது உண்மை தான் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஏமாற்றி விட்டார் என்று எமக்கு தெரிய வந்துவிட்டது. அதுவரை நாம் ஐக்கிய தேசிய கட்சியை நம்பியது உண்மை தான். ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மை தான். அதனை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
ஒக்டோபர் அரசியலமைப்பு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, குழப்பம் வந்த போது, இதற்கு நான் பொறுப்பில்லை, சபையே பொறுப்பு என கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றி விட்டார் என நாம் அறிந்து கொண்டோம். எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், மஹிந்த குடும்பத்தின் ஆடசி மீண்டும் வந்து விடக் கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம்.
இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான பாராளுமன்ற பிரதிநிதிகள் இருக்கமாட்டார்கள். நாம் பட்டு தெளிந்து விட்டோம். நாம் அனைவருடனும் பேசுவோம். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை. இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம். ஏற்கனவே நாம் அனுபவப்பட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
அதுவரை காலமும் நாம் ஐக்கிய தேசிய கட்சியை நம்பியது உண்மை தான் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஏமாற்றி விட்டார் என்று எமக்கு தெரிய வந்துவிட்டது. அதுவரை நாம் ஐக்கிய தேசிய கட்சியை நம்பியது உண்மை தான். ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மை தான். அதனை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
ஒக்டோபர் அரசியலமைப்பு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, குழப்பம் வந்த போது, இதற்கு நான் பொறுப்பில்லை, சபையே பொறுப்பு என கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றி விட்டார் என நாம் அறிந்து கொண்டோம். எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், மஹிந்த குடும்பத்தின் ஆடசி மீண்டும் வந்து விடக் கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம்.
இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான பாராளுமன்ற பிரதிநிதிகள் இருக்கமாட்டார்கள். நாம் பட்டு தெளிந்து விட்டோம். நாம் அனைவருடனும் பேசுவோம். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை. இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம். ஏற்கனவே நாம் அனுபவப்பட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளார்.