கோவிட்- 19 (கொரோனா) வைரஸ் காரணமாக கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமென சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை பரீட்சைகள் ஆணையாளர்...
கோவிட்- 19 (கொரோனா) வைரஸ் காரணமாக கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமென சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை பரீட்சைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார். அப்படியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடங்களில் பரவியவை போலிச் செய்திகள், அவற்றை நம்ப வேண்டாமென பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி.புஜித கேட்டுக்கொண்டுள்ளார்.
திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும். அதேபோல, 2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் திட்டமிட்டபடி, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
சமூக ஊடங்களில் பரவியவை போலிச் செய்திகள், அவற்றை நம்ப வேண்டாமென பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி.புஜித கேட்டுக்கொண்டுள்ளார்.
திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும். அதேபோல, 2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் திட்டமிட்டபடி, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.