யாழ்.மாவடத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்ட தாவடி பகுதி 21 நாட்களின் பின் இன்று திங்கட்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ...
யாழ்.மாவடத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்ட தாவடி பகுதி 21 நாட்களின் பின் இன்று திங்கட்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கடந்த மார்ச் 22ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாத அடையாளம் காணப்பட்டார்.
அன்றைய தினத்திலிருந்து அவரது வதிவிடத்தைச் சூழவுள்ள கிராமம் சுகாதாரத் துறையினரால் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முடக்கப்பட்டது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று திங்கட்கிழமை காலை சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கடந்த மார்ச் 22ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாத அடையாளம் காணப்பட்டார்.
அன்றைய தினத்திலிருந்து அவரது வதிவிடத்தைச் சூழவுள்ள கிராமம் சுகாதாரத் துறையினரால் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முடக்கப்பட்டது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று திங்கட்கிழமை காலை சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது.