கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,000 ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 5,974 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றினால் ஒரேநாளில் ...
கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,000 ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 5,974 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றினால் ஒரேநாளில் அதிகமானவர்கள் உயிரிழந்த நாளாக நேற்றைய நாள் பதிவானது.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,015,059 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,167. வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 212,035 ஆகும்.
நேற்று பிரான்ஸில் ஒரேநாளில் 1,000 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அங்கு 1,355 பேர் உயிரிழந்தனர். வெளியான தகவல்களின்படி, கொரோனாவினால் நாடொன்றல் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதுவரை பிரான்சில் 5,387 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 2,116 பேர் பாதிக்கப்பட்டனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 59,105.
அமெரிக்கா
நேற்றைய நாளில் அமெரிக்காவில் 968 உயிரிழப்புக்கள் பதிவாகின. இதனால் மொத்த உயிரிழப்பு 968 ஆக உயர்ந்தது. புதிதாக 29,874 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதுவரை அந்த நாட்டில் 244,877 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின்
தொடர்ந்து ஸ்பெயினின் நாளாந்த உயிரிழப்பு 1,000 இற்கு அண்மையாக உள்ளது. நேற்று அங்கு 961 பேர் உயிரிழந்தனர். இதுவரை 10,348 பேர் உயிரிழந்தனர். நேற்று 7,947 பேர் தொற்றிற்கு இலக்காகினர். இதுவரை 112,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இருண்ட சுரங்கத்தின் முடிவின் தெரியும் நம்பிக்கை ஒளியாக, தரவுகள் தரும் இந்த செய்தி அமைந்துள்ளதாகவும் ஸ்பெயனின் சுகாதார அமைச்சர் சால்வடோர் இல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, அந்த நாட்டில் பாதுகாப்பு அங்கிகளிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், மருத்துவத்துறையினர் குப்பை அள்ள பயன்படும் பிளாஸ்டிக் பைகளை வெட்டி, ஆடைகளாக பயன்படுத்துவதாக மருத்துவ சங்கமொன்று தெரிவித்துள்ளது.
இத்தாலி
இத்தாலியில் நேற்று 760 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் மொத்த உயிரிழப்பு 12,15 ஆக பதிவாகியுள்ளது. புதிதாக 4,668 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். 115,242 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து
நேற்று இங்கிலாந்தில் 569 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 2,921 ஆக பதிவானது. புதிதாக 4,244 பேர் தொற்றுக்குள்ளாக, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,718 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர, பெல்ஜியம் 183, ஜேர்மனி 176, நெதர்லாந்து 166, ஈரான் 124, துருக்கி 79 என உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
ட்ரம்ப் அறிவிப்பு
கொரோனா வைரஸ் அவசரநிலைக்கு உதவுமாறு ஈரான் தனது நிர்வாகத்திடம் கோரினால், அதைச் செய்ய அவர் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“அவர்களுக்கு வைரஸினால் மிகப் பெரிய பிரச்சனை உள்ளது. மிக மிகப் பெரிய பிரச்சனை. பூமியில் மிக மோசமான ஒன்று. அவர்களுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
முன்னதாக, ஜனநாயக கட்சியின் ஜனாதிபத வேட்பாளர் என கருதப்படும் ஜோசப் பிடன், ஈரானின் நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதை ஆதரிப்பதாகக் கூறினார்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,015,059 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,167. வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 212,035 ஆகும்.
நேற்று பிரான்ஸில் ஒரேநாளில் 1,000 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அங்கு 1,355 பேர் உயிரிழந்தனர். வெளியான தகவல்களின்படி, கொரோனாவினால் நாடொன்றல் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதுவரை பிரான்சில் 5,387 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 2,116 பேர் பாதிக்கப்பட்டனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 59,105.
அமெரிக்கா
நேற்றைய நாளில் அமெரிக்காவில் 968 உயிரிழப்புக்கள் பதிவாகின. இதனால் மொத்த உயிரிழப்பு 968 ஆக உயர்ந்தது. புதிதாக 29,874 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதுவரை அந்த நாட்டில் 244,877 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின்
தொடர்ந்து ஸ்பெயினின் நாளாந்த உயிரிழப்பு 1,000 இற்கு அண்மையாக உள்ளது. நேற்று அங்கு 961 பேர் உயிரிழந்தனர். இதுவரை 10,348 பேர் உயிரிழந்தனர். நேற்று 7,947 பேர் தொற்றிற்கு இலக்காகினர். இதுவரை 112,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இருண்ட சுரங்கத்தின் முடிவின் தெரியும் நம்பிக்கை ஒளியாக, தரவுகள் தரும் இந்த செய்தி அமைந்துள்ளதாகவும் ஸ்பெயனின் சுகாதார அமைச்சர் சால்வடோர் இல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, அந்த நாட்டில் பாதுகாப்பு அங்கிகளிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், மருத்துவத்துறையினர் குப்பை அள்ள பயன்படும் பிளாஸ்டிக் பைகளை வெட்டி, ஆடைகளாக பயன்படுத்துவதாக மருத்துவ சங்கமொன்று தெரிவித்துள்ளது.
இத்தாலி
இத்தாலியில் நேற்று 760 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் மொத்த உயிரிழப்பு 12,15 ஆக பதிவாகியுள்ளது. புதிதாக 4,668 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். 115,242 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து
நேற்று இங்கிலாந்தில் 569 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 2,921 ஆக பதிவானது. புதிதாக 4,244 பேர் தொற்றுக்குள்ளாக, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,718 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர, பெல்ஜியம் 183, ஜேர்மனி 176, நெதர்லாந்து 166, ஈரான் 124, துருக்கி 79 என உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
ட்ரம்ப் அறிவிப்பு
கொரோனா வைரஸ் அவசரநிலைக்கு உதவுமாறு ஈரான் தனது நிர்வாகத்திடம் கோரினால், அதைச் செய்ய அவர் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“அவர்களுக்கு வைரஸினால் மிகப் பெரிய பிரச்சனை உள்ளது. மிக மிகப் பெரிய பிரச்சனை. பூமியில் மிக மோசமான ஒன்று. அவர்களுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
முன்னதாக, ஜனநாயக கட்சியின் ஜனாதிபத வேட்பாளர் என கருதப்படும் ஜோசப் பிடன், ஈரானின் நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதை ஆதரிப்பதாகக் கூறினார்.