கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு உற்சா...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய அவர், வீட்டில் இருந்தவாறே அலுவலக பணிகளை கவனித்து வந்தார்.
எனினும் அடுத்த சில நாட்களில் அவருக்கு நோய்த்தொற்று அதிகமான காரணத்தினால் பிரித்தானியாவின் சென்.தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் வீடு திரும்பிய பொரிஷ் ஜோன்சன் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியதையடுத்து குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனும் ரீதியில் குறித்த குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்ற பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பெடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்த பொரிஷுக்கு அலுவலக ஊழியர்களால் கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தனது அலுவலக ஊழியர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அவர், தனது கடமைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
கொன்செர்வேட்டிவ் அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், கடமைகளுக்கு திரும்பியுள்ள நிலையில் இனிமேல் முழுநேரமாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முழு உலகையும் பதித்து வரும் கொரோனா வைரஸால் பிரித்தானியா பலத்த பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில், 20,732 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள அதேவேளை குறித்த வைரஸால் அந்நாட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 770 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய அவர், வீட்டில் இருந்தவாறே அலுவலக பணிகளை கவனித்து வந்தார்.
எனினும் அடுத்த சில நாட்களில் அவருக்கு நோய்த்தொற்று அதிகமான காரணத்தினால் பிரித்தானியாவின் சென்.தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் வீடு திரும்பிய பொரிஷ் ஜோன்சன் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியதையடுத்து குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனும் ரீதியில் குறித்த குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்ற பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பெடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்த பொரிஷுக்கு அலுவலக ஊழியர்களால் கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தனது அலுவலக ஊழியர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அவர், தனது கடமைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
கொன்செர்வேட்டிவ் அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், கடமைகளுக்கு திரும்பியுள்ள நிலையில் இனிமேல் முழுநேரமாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முழு உலகையும் பதித்து வரும் கொரோனா வைரஸால் பிரித்தானியா பலத்த பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில், 20,732 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள அதேவேளை குறித்த வைரஸால் அந்நாட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 770 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.