படுகொலை குற்றவாளிக்கு மன்னிப்பு - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை - சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டு

படுகொலை குற்றவாளிக்கு மன்னிப்பு - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை - சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டு

மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குகின்ற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை என சிவில் சமூகங்கள் பலவும...

மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குகின்ற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை என சிவில் சமூகங்கள் பலவும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாயான சார்ஜென்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மார்ச் 26, 2020 அன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமையை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாடு முழுவதும் ஊழுஏஐனு-19 வைரஸ் நோய் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில்,  நாட்டின் சட்டவாட்சியை அவமதித்து, கொடூரமான போர் குற்றங்களையிழைத்த இராணுவ குற்றவாளிகள் நாட்டின் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளிலிருந்து அதி உயர்மட்டத்தில் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தினை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி இச் செயலின் மூலம் காட்டியுள்ளார்.

ரத்நாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம், இந்நாட்டின் ஜனாதிபதி, ஒரு சிறுபிள்ளையையும் ஏழு பொதுமக்களையும் படுகொலை செய்த கொடூரமான கொலையாளிக்கு தனது ஆசிகளை வழங்கியுள்ளார்.

மிருசுவில் படுகொலையானது இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஓர் கொடூரமான சம்பவமாகும். டிசம்பர் 17, 2000 அன்று மூன்று இளைஞர்கள் மற்றும் ஐந்து வயது சிறுவன் உட்பட ஒன்பது நபர்கள் உடுப்பிட்டியிலிருந்து மிருசுவிலுக்கு பயணத்தை மேற்கொண்டனர்.

மிருசுவில் கிராமமானது இலங்கை வட மாகாணத்தின் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 மைல் தொலைவில் உள்ளது. யுத்தம் காரணமாக, மிருசுவிலிலிருந்து இடம் பெயர்ந்து உடுப்பிட்டியில் முகாமொன்றில் குடியமர்த்தப்பட்டவர்களில் இவர்களும் உள்ளடங்குவார்கள்.

 இடம் பெயர்ந்த குடும்பங்கள் இராணுவத்திடமிருந்து அனுமதிப் பத்திரத்தை பெற்று, மிருசுவிலில் உள்ள அவர்களுடைய வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கமாகவிருந்தது. ஆனால் அன்று அவ்வாறு சென்றவர்கள் முகாமிற்கு மீளத்திரும்பவில்லை. பின்னர், முகாமிற்கு திரும்பாத ஒன்பது நபர்களில், எட்டு நபர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யபட்டமை வெளிச்சத்திற்கு வந்தது.

டிசம்பர் 24, 2000 அன்று தப்பிப்பிழைத்து மறைவிலிருந்த நபர், நடந்த சம்பவத்தை விபரித்து ஏனைய எட்டு நபர்களும் இருக்கும் இடம் தொடர்பிலான விபரங்களையும்; குறிப்பிட்டார். பொலீஸாரும் நீதவானும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தேடிய பொழுது ஒரு கழிவறை கழிவு கிடங்கில் காணப்பட்ட விலங்கின் எழும்புக்கூட்டினை தவிர அங்கு சடலங்கள் எதுவும் காணப்படவில்லை.

அதன் பின்னர், இராணுவ பொலீஸார் அந்நேரத்தில் அங்கு கடைமையாற்றிய அலுவலகர்கள் அனைவரையும் கைது செய்து விசாரித்த போது ழது சார்ஜென்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்க கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலங்கள் யாவும் குறித்த கழிவறை கிடங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்தில் புதைக்கப்பட்டமை தெரியவந்தது.

இதை தெடர்ந்து பொலீஸாரும் நீதவானும் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்குமிடத்திற்கு சென்று சடலங்களை வெளியிலெடுத்தனர். நான்கு நபர்கள் மற்றும் நான்கு பிள்ளைகளதும் சடலங்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு காணப்பட்டது.

மேலும் சில சடலங்களில் அவர்களது கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டு காணப்பட்டது. கொலை செய்யப்பட்டவர்கள் நான்கு குடும்பங்களின் அங்கத்தவர்களாவர். ஒரு குடும்பத்தில் ஐந்து வயது மற்றும் பதின்மூன்று வயது சிறுவர்களுட்பட நான்கு அங்கத்தவர்களை இழந்து தவித்தது. மற்றுமொரு குடும்பம் தங்களுக்கு வருமானத்தைப் பெற்றுத் தந்த குடும்ப அங்கத்தவர்களை இழந்துள்ளது. மேலும் இரு குடும்பங்கள் அவர்களது பிரதான குடும்ப அங்கத்தவர்களை இழந்தது.

இக்குடும்பங்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க ஒரு தசாப்த காலத்திற்கும் மேலான பொழுதிலும் கூட, பல சாவால்களுக்கு மத்தியில் இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜுன் 24, 2015 அன்று முன்னைய இராணுவ சிப்பாய் சார்ஜென்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்க மிருசுவிலில் எட்டு பொதுமக்களை படுகொலை செய்தமைக்கான கொழும்பில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாய நீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழங்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்பிட்ட தீர்ப்பிற்கெதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்ட பொழுதிலும், ஐந்து நீதிபதிகள் கொண்ட குழாம் இலங்கையின் உயர் நீதிமன்றில் குறிப்பிட்ட தீர்ப்பாய நீதிமன்றத்தீர்ப்பினை ஏகமனதாக ஏப்ரல் 25, 2019 அன்று மீண்டும் உறுதிப்படுத்தியது. 

ஆர்.எம். சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியதனூடாக ஜனாதிபதியின் அதிகாரமானது  துஷ;பிரயோகம் செய்யப்பட்டு நீதியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. கொடூரமான  குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் பொறுப்புக்கூறுவது என்பது மிகவும் அரிதாகவே காணப்படும் ஒரு நாட்டில், இனங்களுக்கிடையிலான நம்பகமற்ற தன்மை ஓரு போருக்குள் தள்ள வழிவகுத்தது.

இவ்வாறான நிலையில் ஒர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தினால் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டு பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட்ட அரிதான சிலரில் ஒருவருக்கே பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் வழங்கிய பொது மன்னிப்பானது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு சவாலாக அமைவதோடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே இலங்கையின் நீதிதுறையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை மேலும் குறைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.

ஏற்கனவே வறுமையினாலும் சொல்லொணா இழப்புக்களாலும் நேரடியாக பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கும் வழக்கின் தீர்ப்பின் மூலம் கிடைத்த மிகச்சிறிய ஆறுதலும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இச்சம்பவத்தின் ஒரே சாட்சியை அரச புலனாய்வு அதிகாரிகள்  சென்று விசாரித்தமை குறித்து அச்சாட்சி மிகவும் அச்சம் கொண்டு, குற்றவாளி விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தனக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.

தற்பொழுது அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உண்மையாகவே காணப்படுகின்ற பொழுதிலும் நமது சட்டங்களும் கட்டமைப்புகளும் அவருக்கு பாதுகாப்பளிக்கக்கூடிய வகையில்  உருவாக்கப்படவில்லை.

பல வருடங்கள் கடந்தும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அல்லது நட்டஈடு நிவாரணத்தை வழங்க அரசு அல்லது அரசாங்க அதிகாரிகளோ வழங்க முன்வராத காரணத்தினால் இவர்கள் வாழ்;நாள் முழுவதும் தங்களுடைய குடும்பத்துக்கு வருமானத்தை பெற்றுத் தந்த உறவுகளை இழந்து மேலும் வறுமையில் வாடுவதென்பது வருத்தத்துக்குரிய விடயம் மட்டுமல்லாமல் ஒரு துயரத் தொடர்கதையாகவுமுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுற்ற நிலையில் செய்தி ஊடகங்கள் மிருசுவில் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படுவாhர் என்பதை அனுமானித்து வெளியிட்டிருந்தன.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மிகவும் அச்சமடைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் முறைப்பாடு செய்து அதேவேளையில் ஊடகங்களுக்கும் அறிவித்தனர். ஆனால் தற்பொழுது நாடு முழுமையாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது எதிர்ப்பினையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தக்கூடிய நிலையில் இல்லை.

 ஊழுஏஐனு-19 என்ற வைரஸ் நோயிலிருந்து நாட்டை மீட்பதாக காட்டிக்கொண்டு, அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, சிறையிலிருக்கும் 'போர் வீரர்களை' விடுவிப்பேன் என்ற தனது தேர்தல் உறுதிமொழியினை ஜனாதிபதி தற்போது நிறைவேற்றுகிறார்.

இதை சரிவர நோக்குவோமாயின், கடந்த மாதம் இலங்கை அரசானது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபைத் தீர்மானத்தின் வாக்குறுதிகளிலிருந்து முழுமையாக தங்களை விலக்கிக்கொண்டது. மேலும் ஜனாதிபதி இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் என யாரும் இல்லையெனவும் அவ்வாறு காணாமல் போனோரெனக் கருதப்படுபவர்கள் இறந்துவிட்டதாகவும் கூறினார்.

அவரது அரசானது போர்க் குற்றவாளிகளென சந்தேகிக்கப்படும் நபர்களை இராணுவத்தில் உயர்மட்ட பதவிகளை வகிக்க பதவி உயர்த்தியுள்ளது. இதில் ஜெனரல் சவேந்திர சில்வா ஊழுஏஐனு 19 என்ற வைரஸ் நோயினை எதிர்த்து போராடி மக்களை மீட்பவரென புகழப்படுகிறார்.

சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வருகின்றது. வடமாகாணத்தில் மாத்திரம் வீதித் தடைகள் சோதனைச் சாவடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது ஒரு படுகொலையாளி ஜனாதிபதியினால் மன்னிக்கப்பட்டு விடுதலையும் செய்யபட்டுள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் செயலானது பாதுகாப்புப்படையினர் மத்தியில் குற்றமிழைப்பவர்கள், அக்குற்றம் பாரதூரமானதாக இருந்து, நீதிமன்றம் அவர்களை குற்றவாளியாக தீர்ப்பளித்த போதிலும், குற்றஞ் சாட்டப்பட்டப்  படையினருக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது என்ற செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றது.

ஏற்கனவே பொலீஸார்; உட்பட்ட பாதுகாப்புபடையினர் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படும் உரிமையை கொண்டவர்களாக கருதப்படுகின்ற சூழலில், இவர்கள் மிகவும்   மோசமான நிலையில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கெதிராக மேலும் கொடூரங்களை மேற்கொள்ள அரசின் செயற்பாடுகள் மறைமுகமாக ஊக்கமளிக்கும்.

சட்டவாட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அமைப்புகளும் தனிநபர்களும் ஆகிய நாங்கள் ஆர்.எம். சுனில் ரத்நாயக்கவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இச்செயலானது மேலும் சமூகததில் இராணுவமயமாக்கலை அதிகரிப்பதுடன் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையின்மை மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

1. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்.
2. பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
3. இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம்
4. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
5. மனித உரிமைகள் அலுவலகம், கண்டி
6. மனித எழுச்சி நிறுவனம்
7. சட்டம் மற்றும் சமூக நம்பிக்கைப் பொறுப்பகம்
8. கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம்
9. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம்
10. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
11. பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம்
12. கிராம அபிவிருத்தி நிலையம்
13. சமூக அபிவிருத்தி நிறுவகம், கண்டி
14. கைதிகளின் உரிமைகளுக்கான பாதுகாப்புக் குழு
15. இன்ஃபோம் மனித உரிமைகளுக்கான தரவு மையம்
16. ஊடக ஊழியர்களுக்கான தொழிற்சங்கங்களின் ஒன்றியம்
17. நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலையம், திருகோணமலை
18. 'ரைட்ஸ் நவ்' ஜனநாயகத்திற்கான கூட்டு
19. 'ரைட் டு லைப்' மனித உரிமைகளுக்கான நிலையம்
20. இலங்கை உழகை;கும் ஊடகவியலாளர் சங்கம்
21. காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு
22. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3318,lanka,8610,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: படுகொலை குற்றவாளிக்கு மன்னிப்பு - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை - சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டு
படுகொலை குற்றவாளிக்கு மன்னிப்பு - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை - சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfsfwTVFQsHF0j8DawQ_KrANJkSLbBrx-lFg3WrAaNYVrl7OuEP1r9TqRIKQYobEuBrme70fQYwNu0ZQxJH8EFUICtBaboKSG7VCcdkqvx1V4Lb_ZC74AuHLx_SX6g_4p_-Qe1YhVcHg/s640/%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfsfwTVFQsHF0j8DawQ_KrANJkSLbBrx-lFg3WrAaNYVrl7OuEP1r9TqRIKQYobEuBrme70fQYwNu0ZQxJH8EFUICtBaboKSG7VCcdkqvx1V4Lb_ZC74AuHLx_SX6g_4p_-Qe1YhVcHg/s72-c/%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%2588.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/04/blog-post_26.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/04/blog-post_26.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content