அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற் காக, போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸாரால் எச்...
அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற் காக, போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “ கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தால், அந்த நபரின் இறுதிச் சடங்குக்கு சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்குப் பொதுமக்கள் ஒன்று கூடுவார்களாயின் அவர்களுக்கு எதிராகவும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.
அவசர நோய் நிலைமை ஏற்பட்டால், எத்தகைய வாகனங்களிலும் செல்ல முடியும். இதற்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரம் தேவையில்லை. பொலிஸாரால் வழங்கப்படும் ஊரடங்குச் சட்ட அனு மதிப்பத்திரம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாகப் புலனாய்வுப் பிரிவைப் பயன்படுத்தி விசாரணை மேற் கொள்ளப்படும்.
அவசரகால அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற் காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “ கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தால், அந்த நபரின் இறுதிச் சடங்குக்கு சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்குப் பொதுமக்கள் ஒன்று கூடுவார்களாயின் அவர்களுக்கு எதிராகவும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.
அவசர நோய் நிலைமை ஏற்பட்டால், எத்தகைய வாகனங்களிலும் செல்ல முடியும். இதற்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரம் தேவையில்லை. பொலிஸாரால் வழங்கப்படும் ஊரடங்குச் சட்ட அனு மதிப்பத்திரம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாகப் புலனாய்வுப் பிரிவைப் பயன்படுத்தி விசாரணை மேற் கொள்ளப்படும்.
அவசரகால அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற் காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும்” என்றும் அவர் தெரிவித்தார்.