ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத் தர்கள் இருவர் கடமை யிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைர...
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத் தர்கள் இருவர் கடமை யிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில், தமக்கு கொரோனா தொற்றுச் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து இருவரும் சிகிச்சை பெற முயற்சித்துள்ளனர்.
அதனையடுத்து பொலிஸ் அதிகாரியின் பணிப்பில் இருவரும் தங்கியிருந்த இடத்தில் தனிமைப்படுத்தப்பட் டிருந்தனர். எனினும் இருவரும் தனிமைப்படுத்தலை மீறி, அனுமதியின்றி வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன் காரணமாக உடனடியாக இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.