யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 45 ப...
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
45 பேருக்கு நடந்த பரிசோதனையிலேயே இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இன்று 45 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் -3 பேர்
போதனா வைத்தியசால அனுமதிக்கப்பட்டவர் - ஒருவர்
தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 41 பேர் உள்ளிட்ட 45 பேருக்கு பரிசோதனை நடந்தது.
இதில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தகவல் வெளியிட்டார்.