நாட்டில் நாளைமுதல் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நாளைமுதல் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களை நடாத்திசெல்லும் போதும், போக்குவரத்தின் போதும் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்றுநீக்கும் செயற்பாடுகள், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விடயங்களில் பொதுமக்கள் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளுக்கு தேவையான மனிதவளம் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, நிறுவன உரிமையாளர்கள் சுகாதார நிலைமைகளை கருத்தில் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் சுகாதார நியமங்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாளைய தினம் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.