2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறவிருந்த போதிலும் ஆட்டநி...
2011ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறவிருந்த போதிலும் ஆட்டநிர்ணயம் இடம்பெற்று இந்தியாவுக்கு வெற்றி விற்பனை செய்யப்பட்டதாக இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இறுதிப்போட்டி நடைபெற்ற காலகட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இவரே பதவியும் வகித்திருந்தார். இந்நிலையில், ஊடகமொன்றுடன் நடந்த நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார். மிகுந்த பொறுப்புடன் இந்த தகவலை தாம் வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி யாராவது நேரடி பகிரங்க விவாதத்திற்கு வருவார்களானால் அதற்கும் தாம் தயார் என்று நேர்காணலில் கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டில் நடந்த இப்போட்டியில் இந்தியா அணி இலங்கை அணியினால் நிர்யணிக்கப்பட்ட 275 என்கிற வெற்றியிலக்கை 48.2 ஓவர்கள் முடிவில் 277 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக் கிண்ணத்தை 6 விக்கெட்டுக்களால் சூவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.