நாட்டின் அனைத்து பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை மாத்திரம் அழைத்து, அவர்களுக்கான பரீட்சைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்ப...
நாட்டின் அனைத்து பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை மாத்திரம் அழைத்து, அவர்களுக்கான பரீட்சைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பரீட்சை நடவடிக்கைகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறும் பல்கலைகழக உபவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சைகளை முன்னெடுக்கும் போது ஒரு மாணவருக்கு ஒரு பரீட்சை அறை என்ற ரீதியில் பரீட்சைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.
அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தனித்தனியான விடுதி அறைகளை பெற்றுக்கொடுப்பதோடு, இரவு 8 மணிக்கு மேல் விடுதி வளாகத்தில் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.