நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 1490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 1490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் 498 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலகட்டம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 70 ஆயிரத்து 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 19 ஆயிரத்து 856 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுள் 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 10 ஆயிரத்து 892 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.