யாழ்ப்பாணம் பகுதியில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போலீசாரால் க...
யாழ்ப்பாணம் பகுதியில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 4 கிராம் 680 மில்லிகிராம் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.