இலங்கையில் இன்று (25) இதுவரை 6 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,007 ஆக உயர்ந்துள்ளது. தென்மராட்சி – கொடிகாமம், கெற்பேலி இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 6 கடற்படை வீரர்களுக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 394 ஆக காணப்படுகிறது. அத்துடன் இன்று காலை வெளியான அறிக்கையின்படி புதிதாக 40 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி இதுவரை 1,602 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இன்று (25) இதுவரை 6 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,007 ஆக உயர்ந்துள்ளது.
தென்மராட்சி – கொடிகாமம், கெற்பேலி இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 6 கடற்படை வீரர்களுக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 394 ஆக காணப்படுகிறது.
அத்துடன் இன்று காலை வெளியான அறிக்கையின்படி புதிதாக 40 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி இதுவரை 1,602 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.