அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலமாகிய வெள்ளை மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் இரகசிய பாத...
அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலமாகிய வெள்ளை மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் இரகசிய பாதுகாப்பு பதுங்கு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கறுப்பின அமெரிக்கரான ஜோர்ச் பிளொய்ட் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நீதிகோரி ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் பெருக்கெடுத்துள்ளன.
இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பிலிருந்த அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.