மவுண்ட் லவனியா கடலோர பாதுகாப்பு திட்டம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின்...
மவுண்ட் லவனியா கடலோர பாதுகாப்பு திட்டம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் முன்னாள் எம்.பி, நமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக மூன்று அமைச்சரவை ஆவணங்கள் முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த மூன்று அமைச்சரவை ஆவணங்களின் ஒப்புதலுடன் மட்டுமே அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் பார்வையில், சாதாரண நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று நிகழ்ந்துவிட்டது என்ற நியாயமான சந்தேகம் நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, தெளிவான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கடலோர அரிப்பைத் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டம் முதலில் களுத்துறை கடற்கரையில் இருந்து தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் தொடர்பான அமைச்சரவை ஆவணங்களை வழங்கியவர் யார். ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுத்தவர் யார். தொழில்நுட்ப அறிக்கையை யார் கொடுத்தார்கள். சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டதா?
பொதுமக்களை ஏமாற்ற முடியாது. அதிகாரிகள் என்ன சொன்னாலும், ஏதேனும் தவறு இருந்தால், தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.