பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சாயித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சாயித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவரே தனது ட்விட்டர் தளத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக வலித்தது. நான் சோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக நான் கொவிட்19 க்கு உள்ளானேன் விரைவாக மீட்க பிரார்த்தனை தேவை என்று தனது ட்விட்டர் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பரவலுடன் பாகிஸ்தான் பாதிப்பை எதிர்கொண்டிருந்ததால், அப்ரிடி தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல உதவிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.