நேற்றையதினம் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் மூலம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாமில் பலரும் ஆர்வமாக கலந...
நேற்றையதினம் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் மூலம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாமில் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இந்த இரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் பங்குபற்றியிருந்த போதும் சில நிராகரிப்பு காரணமாக 97 பேருடன் நிறைவு பெற்றது.
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினால் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஒவ்வொரு வார இறுதியிலும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாவற்குழி , கீரிமலை ஆகிய இடங்களில் நடாத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட குருதிக்கொடையாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனொரு தொடர்ச்சியாகவே நேற்றைய தினம் யாழ், கொக்குவில் இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது. துவாரகன் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.