அரச ஊழியர்கள் சகலரும் அடுத்த வாரம் தொடக்கம் வேலைக்கு அழைக்கப்படுவார்கள் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமை...
அரச ஊழியர்கள் சகலரும் அடுத்த வாரம் தொடக்கம் வேலைக்கு அழைக்கப்படுவார்கள் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அரச ஊழியர்களில் மூன்றில் ஒருபகுதியினர் மாத்திரமே பணியிடங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து சேவை வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக அரச உத்தியோகத்தர்களையும் அடுத்த வாரம் முதல் வேலைக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.