யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ப...
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பவதாரணி இராஜசிங்கம் உள்ளிட்ட வேட்பாளர்கள் நேற்றுமுன்தினம் மக்கள்சந்திப்பை நடாத்தியிருந்தனர்.
மானிப்பாய், சாவற்கட்டு, ஆனைக்கோட்டை , நவாலி,சாந்தை ,வடலியடைப்பு, மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய்,சங்கானை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் சந்திப்பில் பிரதேசமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்ததுடன் அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தர உறுதியளித்தனர்.
குறித்த பிரதேசமக்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்த பவதாரணி ராஐசிங்கம் இன்றைய தினம் அவற்றுக்கான சில மாற்றுவழிகளை மேற்கொள்ளும்பொருட்டு அவர்சார்நத குழுவினரை களத்தில் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.