தமிழரசு கட்சிக்குள் எந்தவித மோதலும் கிடையாது. ஆனாலும் விருப்பு வாக்குகளை பெற வேட்பாளர்கள் ஆரோக்கியமாக போட்டியிடுகின்றனரென தமிழரசுக்கட்சிய...
தமிழரசு கட்சிக்குள் எந்தவித மோதலும் கிடையாது. ஆனாலும் விருப்பு வாக்குகளை பெற வேட்பாளர்கள் ஆரோக்கியமாக போட்டியிடுகின்றனரென தமிழரசுக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசு கட்சிக்குள்ளேயே ஒற்றுமை கிடையாது. இந்த நிலையில் எவ்வாறு அவர்கள் விலகிச் சென்ற தரப்புக்களை ஒன்றிணைப்பார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழரசு கட்சியின் துணை பொதுச்செயலாளர் சீ.வி.கே.சிவஞானத்திடம் வினவிய போது தமிழரசுக்கட்சிக்குள எவ்வித மோதலும் கிடையாது என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழரசு கட்சிக்குள் எந்தவொரு மோதலும் கிடையாது. ஆனாலும் ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஆரோக்கியமான வகையில் போட்டி போடுகின்றனர். அதனை நாம் பிழையாக பார்க்க முடியாது. போட்டி
போடும் வேட்பாளர்கள் தமக்கு தமக்கென வாக்கு சேகரிப்பதை பிழையாக கருதமுடியாதெனவும் தெரிவித்தார்.