கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இ...
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேரூந்தே 3.30 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் தடம் புரண்டு வீழ்ந்துள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.