இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தமக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பா...
இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தமக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இவ் அறிவித்தலை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில் கட்டுநாயாக்க விமானநிலையத்தில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்வது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திரி ஒருவர், விமான நிலையத்தில் வைத்து PCR சோதனையை மேற்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியன்னா மாநாட்டு உடன்படிக்கைக்கு அமைய, இராஜதந்திரிகளுக்கு பல்வேறு சலுகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயினும் கொரோனா பரவல் நிலையில் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில், பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.