இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்...
இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
இன்று 56 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையை சேர்ந்த 5 பேர், மன்னார் பொது வைத்தியசாலையை சேர்ந்த 5 பேர், பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தை 5 பேர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 14 பேர்.
காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையை சேர்ந்த 26 பேரென மொத்தம் 56 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.