நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்...
நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்று முன்னர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் நேற்றும் இன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.
மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.