மண்டைதீவில் 420 கஞ்சா மீட்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸாரிடம் ஒருவர் சரணடைந்துள்ளார் மண்டைதீவு கடற்பகுதியில் 420 கிலோ கஞ்சா மீட்கப்படட சம்ப...
மண்டைதீவில் 420 கஞ்சா மீட்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸாரிடம் ஒருவர் சரணடைந்துள்ளார்
மண்டைதீவு கடற்பகுதியில் 420 கிலோ கஞ்சா மீட்கப்படட சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 420 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டது. மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது,கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டது.