கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார், கந்தக்காடு புனர்வா...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா தொற்றாளர்களர்கள் அடையாளங்காணப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்,
தனிமைப்படுத்தல் நிலையங்களை ஸ்தாபிக்கும் போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடு்ககப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் எவ்வாறான சவால்கள் வந்த போதிலும் மக்களை பாதுகாக்கும் கடமையை ஒரு போதும் கைவிடப் போவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்,