பூநகரி பகுதியில் இன்று காலை நடந்த விபத்துச் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மொறட்டுவை பல்கலைக்...
பூநகரி பகுதியில் இன்று காலை நடந்த விபத்துச் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் யாழ் நல்லூர் பகுதியை மோகன் ஆகாஷ் என்ற மாணவரே உயிரிழந்தவர் ஆவார்.
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதினாலேயே மேற்படி விபத்துச் சம்பவம் நடந்துள்ளது.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.