கொரோனா என்ற அச்சமில்லாது அனைத்து மக்களும் வாக்களிக்குமாறு யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார் . எதிர்வரும...
கொரோனா என்ற அச்சமில்லாது அனைத்து மக்களும் வாக்களிக்குமாறு யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார் .
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
எதிர்வரும் 5 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் எமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் நீங்கள் உங்களுக்கு சேவை செய்யக் கூடிய சரியானவர்களை பாராளுமன்றம் அனுப்ப நீங்கள் கட்டாயம் தேர்தலில் பங்குபற்றவேண்டும்.