நல்லூர் ஆலய திருவிழாவை தடையின்றி நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்கிறார் அரசஅதிபர்.

நல்லூர் ஆலய திருவிழாவை தடையின்றி நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்கிறார் அரசஅதிபர்.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடாத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்...

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடாத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உற்சவம்  தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அரசஅதிபர் நாளை  நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது . யாழ் மாவட்டம் கொரோனா  கட்டுப்பாடு  பேணப்பட்டு வரும் நிலையில் இந்த நிலைமையை தொடர வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. 

இந்த சூழ்நிலையிலே யாழ் குடாநாட்டில் நிறைய ஆலயங்களில் திருவிழாக்கள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது அதேபோலத்தான் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது இந்த நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவை முன்னிட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் ஏனைய திணைக்களங்கள் போலீஸ் ராணுவத்துடன் இணைந்து நாங்கள்  மேற்கொண்டுள்ளோம்.

அவை அனைத்தும் தற்போது பூரண படுத்தப்பட்டுள்ளது எனினும் தற்போது பக்தர்களுடைய வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது வழமையாக நல்லூர் ஆலய உற்சவத்திற்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவது வழமை அதாவது லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்ளும் ஒரு திருவிழாவாக நல்லூர் ஆலய திருவிழா காணப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாட்டுடன் இந்த நல்லூர் ஆலய உற்சவத்தினை நடாத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

வழமைபோன்று இன்று தொடக்கம்
வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதேபோல கடைகள் வியாபார நிலையங்களிற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது அன்னதானம் காவடி மற்றும்  பக்தர்களின் வழிபாட்டு முறைகள் சிலவற்றிற்கும்  இம்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நல்லூர் ஆலய உற்சவத்தினை சிறப்பாக மேற்கொள்வதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமாக காணப்படுகின்றது.

ஆலயத்திற்கு உள்ளும் வெளியிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் அதேபோல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களின் வருகையினை  எதிர்பார்க்கின்றோம்.

எனவே வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கபடுவார்கள் அதேபோல் இந்த ஆலய திருவிழாவின் போது பெரும் திரளாக மக்கள் கூடி  சமூகத்தொற்று ஏற்படா வண்ணம் ஆலய உற்சவத்தில் மக்கள் கலந்து கொள்வதன் மூலமாகவே நல்லூர் ஆலய உற்சவத்தினை  தொடர்ச்சியாக 25 நாட்களும் எந்தவித தடையுமின்றி நடாத்த முடியும் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் போலீசாரின் செயற்பாட்டிற்கு தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை கட்டாயம் வழங்க வேண்டும் ஏனென்றால் அவர்களால் சில பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதனையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் ஆலய உற்சவத்தினை தொலைக்காட்சி வழியாக வீடுகளிலிருந்து நேரடியாகவும் அதனைப் பார்க்க முடியும் அதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண  நகரம்  சனநெரிசல் கூடிய ஒரு  பிரதேசம் அதே நேரத்தில்  கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ள  பிரதேசம்  இந்த ஆலய உற்சவத்தில் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமலும் அதனைப் பாதுகாத்து கொள்ள வேண்டிய பொறுப்பு எம் அனைவரையும் சார்ந்ததே எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3319,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: நல்லூர் ஆலய திருவிழாவை தடையின்றி நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்கிறார் அரசஅதிபர்.
நல்லூர் ஆலய திருவிழாவை தடையின்றி நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்கிறார் அரசஅதிபர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVioPCfXkzyy6flntKxXgKZ3W7E_mokHhyphenhyphenLzaJjD5opln1tvP_Y6nxipQfZzd49frRGKf1qHRq0AsaAp-EOahQ2JTrPQNJCMLkXPPv0FdQJ720WX9eUQRPEiGD-0VcLovfSZv7NsW4mzE/s320/20200724_131101.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVioPCfXkzyy6flntKxXgKZ3W7E_mokHhyphenhyphenLzaJjD5opln1tvP_Y6nxipQfZzd49frRGKf1qHRq0AsaAp-EOahQ2JTrPQNJCMLkXPPv0FdQJ720WX9eUQRPEiGD-0VcLovfSZv7NsW4mzE/s72-c/20200724_131101.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/07/blog-post_230.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/07/blog-post_230.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content