இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2772 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே,2770 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்...
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2772 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே,2770 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 655 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.