சிறீலங்கா சுதந்திர கட்சியின் பெண் வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கம் நேற்று முன்தினம் கிளிநொச்சி - புளியம்பொக்கனை பிரதேசமக்களை சந்தித்து கலந்துர...
சிறீலங்கா சுதந்திர கட்சியின் பெண் வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கம் நேற்று முன்தினம் கிளிநொச்சி - புளியம்பொக்கனை பிரதேசமக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அரைகுறையாக கட்டப்பட்டு பூர்த்தியாகாமல் உள்ள தமது வீடுகளை சுட்டிக்காட்டிய மக்கள் அதனை புனரமைத்து தருமாறு கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இதன்போது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மின்சாரம், தண்ணீர், மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகள் முற்றுமுழுதாக கிடைக்காதவர்களாக தாம் வாழ்ந்துவருவதாக பவதாரணி ராஜசிங்கத்திடம் தெரிவித்த மக்கள் மேற்பட்ட அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்திசெய்து தரும்படி கேட்டுக்கொண்டனர். தன்னாலான உதவிகளை மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.
மேலும் குறித்த பிரதேசத்தில் கற்றலுக்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு போதுமான வசதிகள் இல்லை என்பதனையும் விசனத்துடன் தெரிவித்தனர். மக்களின் குறைகளை கேட்டறிந்தவர் தன்னாலான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.