கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையினை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. இலங்கைக்கு விதிக்கப்பட்ட...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையினை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை நேற்றுமுதல் தளர்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் அத்தியாவசிய பயணங்களுக்கு மாத்திரம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரத்தானியா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கின்றது,
கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அத்தியாவசிய சர்வதேச பயணங்கள் தவிர்த்து ஏனைய பயணங்களை இயன்றளவு தவிர்த்து செயற்படுமாறு ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகம் பிரித்தானிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.