யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் முன்னாள் விவசாயப் பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதனின் ஆதர...
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் முன்னாள் விவசாயப் பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதனின் ஆதரவாளர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,
நேற்றிரவு தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நிறைவு செய்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் ஒருவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,
அத்துடன் இதன் போது காயமடைந்த நிலையில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் ஆதரவாளர்களின் வாகனங்கள் சிலவும் இதன் போது சேதமடைந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் 53 வயதாக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்,