தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வும் வழங்கப்படாத நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயக...
தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வும் வழங்கப்படாத நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
நாவற்குழியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்கப் போவதில்லை
அவர் தேர்தல் காலத்தில் கூட சிறுபான்மையின மக்களின் வாக்கு எனக்கு தேவையில்லை எனக் கூறி தென்பகுதி மக்களின் அதிகூடிய வாக்கில் ஜனாதிபதியாகியுள்ளார். அதேபோல் தற்பொழுதும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் எந்த ஒரு கரிசனையும் செலுத்தாது தென்பகுதி மக்களின் நலன் கருதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
எனவே இந்த சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது . எதிர்வரும் காலத்தில் எமது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறும் போதே நமக்கு உரிய தீர்வு சாத்தியமாகும். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நன்றாக சிந்தித்து எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.