அனுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட இருந்த தபால் மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட...
அனுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட இருந்த தபால் மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனுராதபுர மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
நிறுத்தப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்புக்கான புதிய திகதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.