பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத...
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதுடன், அவரை இழுத்துச் சென்று நீதிமன்ற பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தன்னை ஊடகவியலாளர் என்று அடையாளப்படுத்திய போதும் அவர் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸ்சாவடியில் வைத்து தனது கெமராவில் இருந்த மெமரி கார்டுகளை எடுத்து கொண்டதாக ஊடகவியலாளர் கூறியுள்ளார்.