யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர், நேற்று நண்பகல் வேளையில் உடையார்கட்டு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர், நேற்று நண்பகல் வேளையில் உடையார்கட்டு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்
அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனையடுத்து, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், வனவள திணைக்கள அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடத்தினர்.
இதில், நடத்திய தேடுதலின் போது அவர்கள் முத்தையன்கட்டு கொய்யாகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
இதனையடுத்து, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் எதற்காக வன பகுதிக்குச் சென்றார்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.