சி.வி விக்னேஸ்வரனினால் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமிழ் மொழியே இலங்க...
சி.வி விக்னேஸ்வரனினால் ஒருபோதும் பிரபாகரனாக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தமிழ் மொழியே இலங்கையின் மூத்த மொழியென சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனின் கருத்துக்கு ஆதரவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருந்தார். அந்த இரண்டு நபர்களுக்கும் நான் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த வேண்டும்.தாய்மண் குறித்து இந்த சபையில் பேசி இனவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடானது நாடாளுமன்றத்தின் கௌரவத்தை இல்லாது செய்யும் செய்பாடாகும்.
இந்த நாட்டின் மூத்த மொழியை தமிழ் மக்களே கதைப்பதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார்.சிங்கள மக்கள் அவர்களுக்கு பின்னர் வந்ததாகவே அவர் அந்தக் கருத்தின் கூறியும் கூறாமலும் கூறுகின்றார்.இந்த நாட்டில் சிங்கள மக்களை அவமதிப்புக்கு உட்படுத்தி சிங்களவர்களுக்கு இந்த நாட்டில் உள்ள இருப்பை இல்லாது செய்வதற்கு முனைகின்ற யாருக்கும் நாம் தலைகுணியப் போவதில்லை.அவ்வாறான நபர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பும் இல்லை என்பதை நான் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.