பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகேஸ்வரி நிதியத்தின் பல கோடி ரூபாய் சொத்துக்களை சூறையாடியது றஜீவ் தான் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகேஸ்வரி நிதியத்தின் பல கோடி ரூபாய் சொத்துக்களை சூறையாடியது றஜீவ் தான் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் வரதராஜ சிங்கம் விண்ணன் குற்றஞ்சாட்டினார் .
யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் றஜீவ் என்பவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட மகேஸ்வரி நிதியத்தின் மூலம் யாழ் குடா நாட்டு மக்களுக்கான மணல் விநியோகம் இடம்பெற்றது.
அவ் வேளை அதிலிருந்த 96 டிப்பர்கள் 16 ஜே.சி.பி இயந்திரங்கள் 70க்கும் மேற்பட்ட டாக்ரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன .
இந்நிலையில் குறித்த நிதியத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டபோது அதிலிருந்த குறித்த பல கோடி பெறுமதியான சொத்துக்களை குறித்த நபர் விற்பனை செய்து பெருமளவு பணத்தை சுருட்டியுள்ளதாக அறியக்கிடைத்தது.